tamilnadu

திருப்பூரில் வரதட்சணை எதிர்ப்பு தின பேரணி

திருப்பூர், ஜன. 28 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் சார்பில் வரதட்சணை எதிர்ப்பு தினம் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வரதட் சணை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது பல்லடம் சாலை, தமிழ்நாடு திரையரங்கம், லட்சுமி திருமண மண்டபம் சாலைகளின் வழியே எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியை வந்தடைந்தது. இதில் கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மரகதம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பங் கேற்றனர்.

;