tamilnadu

போதை ஆசாமிகளின் கூடாரமாகும் அங்கன்வாடி மையம்

அவிநாசி, ஜூன் 8- அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி ராயங்கோயில் காலனியில் உள்ள அங்கன் வாடி மையம்போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறு வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட வேலாயுதம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயங்கோயில் காலனி குமாரசாமி நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. மேலும், இதனையொட்டி 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கோவில்கள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தில் மாலை நேரங்களில் மது பிரி யர்கள் மது அருந்தி வருவதுடன், அவ்வழியாகச் செல் லும் பெண்கள், மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட் டோரை தகாத வார்த்தையில் பேசி , கேலி செய்து வரு கின்றனர். அத்துடன் மது பாட்டில்கள், பாலித்தின் பைகளை சுகதார கேடு ஏற்படும் வகையில் ஆங் காங்கே வீசி செல்கின்றனர். எனவே, இது குறித்து ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச் சுவர் அல்லது கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.