tamilnadu

img

திருப்பூரில் அம்பேத்கர், கே.ஜி.போஸ் நினைவேந்தல்

திருப்பூர், டிச. 11- இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் மற்றும் தபால் தந்தி ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் கே.ஜி.போஸ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்றது. தொலைத் தொடர்புத் துறையில் தபால் தந்தி ஊழியர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்த மாபெரும் தலைவரான கே.ஜி.போஸ் நினைவு நாள் டிசம்பர் 11 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அத்துடன் அண்ணல் அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகையில், பிஎஸ்என் எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் வாலீசன் தலைமை யில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில நிர்வாகி பா.சௌந்தரபாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் ஆகியோர் அம்பேத்கர், கே.ஜி.போஸ் ஆகியோரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். இதையடுத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள், தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் தலைவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.