tamilnadu

img

திருப்பூர் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து!

திருப்பூர்,பிப்.09-
திருப்பூர் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 டன் பஞ்சு எரிந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் எஸ்.ஆர்.செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில்லில் இயந்திரத்தில் மின்சாரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவெனப் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் இயந்திரம், மேற்கூரை, 9 டன் பஞ்சு ஆகியவை எரிந்து நாசமானது.

;