திருப்பூர், ஜூன் 13- தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இ சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் சுமார் 70 ஊழியர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டது. இது அந்த ஊழியர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசுக் கேபிள்டிவி கார்ப்பரேஷன் மூலமும், எல்காட் நிறுவனத்தின் மூலமும் கிராமங்களி லும், நகரங்களிலும் இ சேவை மையங் கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையான வருவாய், இருப்பிடம், சாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் இணைய சேவை (ஆன்லைன்) மூலம் விண் ணப்பித்து, குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படுகின்றன. இதில் தமிழகம் முழுவதும் இ சேவை மையங்களில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் 2000 பேர் வரை பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.8000 ஊதியம் வழங்கப்படுகிறது. இ சேவை மையங்களில் பொது மக்கள் கேட்கும் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களில் தேவையான ஆதாரங்களை பதிவேற்றம் செய்து இவர்கள் அனுப்ப வேண்டும். அவற் றைப் பரிசீலித்து குறிப்பிட்ட நாட்க ளில் பொதுமக்கள் கேட்கும் சான்றி தழ்கள் இணைய வழியிலேயே வழங் கப்படும். அவற்றை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் சான்றிதழ் விண் ணப்பங்களுக்குத் தேவையான ஆதார ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதில் தவறு செய்ததாகக் கூறி, தமிழகத்தில் 70 ஊழியர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, பல்லடம், மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய நான்கு மையங் களில் பணியாற்றியோர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஊழியர்கள் வேலையை இழந்து கேள்விக்குறியோடு நிறுத்தப்பட்டி ருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி பணிநீக்கம் செய்யப் பட்ட ஊழியர்களிடம் கேட்டபோது கூறியதாவது: சான்றிதழ் வழங்கத் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ததில் தவறிழைத்த தாக எங்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் பணியில் சேர்த்தபோதே எங்களுக்கு முறை யான, தெளிவான தொழில்நுட்பப் பயிற்சி வழங்கவில்லை. வாய்மொழி யாக நிர்வாகம் கொடுத்த வழிகாட்டு தலின் அடிப்படையில்தான் நாங்கள் வேலை செய்து வந்தோம். அதேசம யம் சான்றிதழ் கேட்டு வரக்கூடிய பொதுமக்களும் உரிய ஆவணங் களைக் கொண்டு வந்து தருவதில்லை. இ சேவை மைய தொழில்நுட்ப நடை முறைகள் அவர்களுக்குத் தெரியாத நிலையில், நாங்கள் இதைப் பற்றி எடுத்துச் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் எங்களுடன் சண்டைக்கு வருவார்கள். ஒருபுறம் நிர்வாகம், மறுபுறம் பொது மக்கள் என இருதரப்புக்கும் இடையில் நாங்கள் கடும் நெருக்கடி நிலையில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பொதுமக்களின் தேவைக்காக நாங்கள் சிரமம் பார்க்காமல் கூடுதல் நேரம் பணி செய்து தருவதும் உண்டு. ஆனாலும் மக்களிடமும் நற்பெயர் கிடைக்காது, அரசு நிர்வாகமும் எங் களை திடீரென வீதியில் நிறுத்து கிறது. இதில் எங்களுக்கு நியாயம் கிடைக்க தமிழக அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் சம் பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிக ளுக்கு கடிதம் எழுதவும் முடிவு செய் துள்ளனர். சமீபத்தில் இ சேவை மைய ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியு தலைமையில் இ சேவை மையங்களில் தேவை யான அடிப்படை வசதிகளை நிறை வேற்றித் தர வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடத்தினர். இந்த சூழ்நிலை யில் குறிப்பிட்ட சிலர் பணிநீக்கம் செய் யப்பட்டிருப்பது பற்றி கேட்டபோது, இது முழுக்க தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைதான், போராட்டத்தில் பங்கேற்காதவர்களும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. எனினும் உரிமைகளைக் கேட்டு போராடிய சூழலில் தொழில்நுட்ப காரணத்தைச் சொல்லி 70 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, எஞ்சிய ஊழியர்கள் அச்சத்துடன் கேள்வி இன்றி பணி செய்ய வேண்டும் என அச்சுறுத்தும் நடவடிக்கையாகவும் இருக்கலாம் என்று ஊழியர்கள் கூறு கின்றனர்.