திருப்பூர், ஆக. 16 – சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகரப் பேரரசு காலத்திய நடுகல் ஒன்று திருப்பூர் அருகே பொங்குபாளை யம் கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தோர் மேற் கொண்ட ஆய்வின்போது இந்த நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து இந்த ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறி யாளர் சு.ரவிக்குமார் கூறியதா வது:பண்டைய தமிழ் சமூகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு, மறைந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் மரபு தொடர்ந் துள்ளது.
இத்தகைய நடுகற்கள், கல்வெட்டுகள் மற்றும் அகழ் வாய்வில் கிடைக்கும் பல தொல் பொருட்கள் மூலமாக பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நெறி முறைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை இன்றைய தலைமுறை அறிய முடிகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகு திகளில் இத்தகைய ஏராளமான தொல்லியல் சான்றுகள் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளன. இதன் மூலம் பண்டைய காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள், இனக்குழு சமுதாயமாக கால்ந டைகளைக் காத்து வளர்த்தல், வேளாண்மை செய்து அவற்றை சேமித்தல், விவசாய பாசனத் திற்காக ஆறு, குளம், குட்டைகளை மேம்படுத்தி பயன்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையை கொண்டிருந்தது உறுதிப்படு கிறது. தங்கள் வாழ்விடங்கள்,
இனக்குழுக்களை ஆக்கிரமிப் பாளர்களிடம் இருந்து காப்பாற் றவும், தங்களது இனக்குழு நிலப் பரப்பை விரிவுபடுத்த போர் புரிவதும், அதில் பங்கேற்று வீர மரணம் அடைவோருக்கு நடுகல் எடுத்து வழிபடும் மரபும் கி.மு.ஆயிரம் ஆண்டு கால கட்டத்தில் இருந்தே தொடர்ந்துள்ளது தெரி கிறது. இந்நிலையில், பொங்கு பாளையத்தில் கிடைத்துள்ள நடுகல் 120 செ.மீட்டர் அகல மும், நிலமட்டத்துக்கு மேல் 45 செ.மீட்டர் உயரமும் கொண்டி ருக்கிறது. இதில் உள்ள மாவீரன் உருவம் தன் வலது கையில் ஓங் கிய வாளுடனும், தனது இடது கையை இடுப்பில் வைத்தபடியும் அணிகலன்கள் அணிந்து கம்பீ ரமாகக் காட்சியளிக்கிறது. இவ ரது அருகில் இருக்கும் பெண் தன் வலது கையில் பூ ஒன்றை ஏந்தி இருப்பதுடன், இடது கையில் ஒரு பொருளை வைத்தி ருக்கிறார்.
இடையில் மட்டும் ஆடை அணிந்துள்ள இந்த சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இந்த நடுகல் ஏறத்தாழ 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகத் தெரிகிறது. இக்காலம் விஜய நகரப் பேரரசின் காலத்தைக் குறிப்பதாகும். பழங்கால வரலாற்றைத் தெரி விக்கும் இது போன்ற நடுகற்கள் உள்ளிட்ட தொல்லியல் பொருட் களை அரசும், சமுதாயமும் பாது காக்க வேண்டும். அதன் மூலம் பண்டைய செழிப்பான வாழ்வி யல் விழுமியங்களை அறிந்து கொள்ள முடிவதுடன், அதை இன்றைய காலத்துடன் பொருத்திப் பார்த்து நம்மை செம்மைப்படுத்திக் கொள்ளவும் உதவக் கூடியதாக இருக்கும் என்று பொறியாளர் சு.ரவிக்குமார் தெரிவித்தார்.