tamilnadu

டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

அவிநாசி, ஜன. 26- அவிநாசி அருகே குப் பாண்டபாளையத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலி யானார். அவிநாசி ஒன்றியம், குப் பாண்டபாளையம் ஊராட் சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் உள்ள பனியன் தொழி லாளி ரங்கசாமியின் மகள் காவியஸ்ரீ (5) டெங்கு காய்ச் சல் பாதிப்பு காரணமாக தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந் நிலையில் மேல்சிகிச்சைக் காக கோவை அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இருப்பினும் சிகிச்சை பல னின்றி ஞாயிறன்று மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தார்.

;