திருப்பூர், ஜூலை 21- திருப்பூர் மாநகராட்சி 19ஆவது வார்டு பொன்னம்மாள் நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் ஒவ்வொரு நாளும் விபத்துகள் தொடர் கதையாக இருப்ப தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கு பகுதியில் பொன்னம்மாள் நகர் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை பெயர்ந்து கற்க ளுடன் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதன் சுற்று வட் டாரப் பகுதியில் மக்கள் நெருக்கம் அடர்த்தியாக உள்ளது. ஏறத்தாழ 1000 வீடுகள் வரை இருக்கும் இப்பகுதியில் இந்த சாலை தொழிலாளர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பெண்கள் அன்றாடம் சென்று வருவதற்கு பிரதான பாதையாக இருக்கிறது. குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது ஒவ்வொரு நாளும் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். பாதசாரிகள் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. பொன்னம்மாள் நகர் சாலையின் முடிவில் வடக்கே கணக்கம்பாளையம் செல்லவும், தெற்கே அம்மன்நகர், பூலுவபட்டி செல்லவும் முக்கியப் பாதையாக உள்ளது. இந்த சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக போடப்பட்டது. அப்போது திருப்பூர் ஊராட்சி ஒன்றி யத்தில் நெருப்பெரிச்சல் கிராம ஊராட்சியாக இருந்தது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இச்சாலையை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அனைத்து வசதிக ளும் விரைவில் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏற்கெனவே போடப்பட்ட சாலை சிதில மடைந்த போதும் அதை உள்ளாட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட் டுகின்றனர். தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் அதிகமானோர் குடியிருக்கும் இந்த வட்டாரத்தில் முக்கியமான போக்கு வரத்து சாலை இந்த நிலையில் இருப்பதை சரி செய்ய வேண்டும் என அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்ற னர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலையைச் செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமசாமி கூறுகிறார். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தார்ச்சாலையை புதுப்பித்து அமைத்து கொடுக்க வேண்டும், இல்லாவிட் டால் அடுத்தக்கட்டமாக போராட்டத்திற்கு தயாராக வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பொன்னம்மாள் நகர் மக்கள் கூறுகின்றனர்.