திருப்பூர், செப். 8- திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,310 லிட்டர் பாமாயில் உணவு பாதுகாப்பு அதி காரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்லடம் சாலையில் உள்ள எண்ணெய் விற்பனை செய் யும் கடைகள், நிறுவனங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மணி, கேசவராஜ் அடங்கிய குழுவினர் சனியன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, ஒரு தனியார் நிறுவ னத்தில் பாமாயிலை கடலை எண்ணெய் என்று பாக்கெட்டுகளில் அடைத்தும், பாமா யிலை சமையல் எண்ணெய் என்றும் உணவு பாதுகாப்பு சட்டவிதிகளை மீறி விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவ்வாறு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,310 லிட் டர் பாமாயில் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் பாக் கெட்டுகளில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள் ளது. பறிமுதல் செய்யப்பட்ட பாமாயிலின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். பகுப்பாய்வு அறிக்கை முடிவின்படி உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தெரிவித்துள்ளார்.