tamilnadu

காதலன் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்

திருப்பத்தூர், ஜூன் 14- ஜோலார்பேட்டை அருகே காதல் விவ காரத்தில் காதலன் வீட்டை 60 பேர் கொண்ட  கும்பல்  உடைத்து தீ வைத்து துவம்சம் செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த குன்னத்தூர் பகுதியில் உள்ள  காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவ ணன். இவரது மகன் திருப்பதி (26). இவர் லேப் டெக்னீசியனாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள்  தர்ஷினி (22). இவர் பி.காம் முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். கடந்த நான்காண்டுகளாக திருப்பதியும், தர்ஷினியும் காதலித்து வந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த திருப்பதி கடந்த 2 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூன் 12) திருப்பதி யாருக்  கும் தெரியாமல் தர்ஷினி வீட்டிற்கு சென்று,  திருமணம் செய்துகொள்ள அழைத்து சென்ற தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிந்த தர்ஷினி யின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் 60க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை (ஜூன் 13) இரவு காமராஜபுரத்தில் உள்ள திருப்பதி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு அவரது  வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்த னர். இதில் வீட்டில் இருந்த  கட்டில் பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து  நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை காவல்  துறையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்,  ஆனால் முடியவில்லை. இதையடுத்து திருப்  பத்தூர் தீ அணைப்பு துறையினர் வந்து தீயை  அணைத்தனர். இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொள்ள வெளியேறிய அந்த பெண்ணும் இளைஞரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.