ஆம்பூர், மார்ச் 4- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் இஸ்லாமியர்கள் அனைத்து ஜமாத்துகளும் இணைந்து நடத்தும் ஷா ஹீன் பாக் , மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங் களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் 14 - வது நாளாக தொடர் போராட்டத்தில் முஸ்லிம் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி, திருப்பத்தூர் சமூக சேவகரும் இந்தியாவி லேயே முதன் முறையாக சாதி மதம் அற்ற வர் என சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர் சினேகா ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாணி யம்பாடி தாலுகா செயலாளர் இந்துமதி, அர்ஜூணன், சீனிவாசன் மதிமுக நகரச் செயலாளர் நசீர்கான் உள்ளிட்டோரும் உரை யற்றினர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண் கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.