tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆம்பூரில் சிறப்பு முகாம்

ஆம்பூர், மார்ச் 10 - திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம. ப. சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது.  இந்த முகாமில் மூன்று சக்கர மிதிவண்டி, மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் முதியோர் உதவித்தொகை என நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச. பாபு வரவேற்றார். ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி. வில்வநாதன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், ஆம்பூர் வட்டாட்சியர் செண்பக வள்ளி உள்ளிட்டோர் பேசினர். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்த  500க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.