திருநெல்வேலி, ஜூன் 29- நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதி கரித்தது. மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் விழுந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. 2 நாட்களாக கடும் வெயில் அடித்தது. காற்று வேகமாக வீசியது. மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து வெகு வாக குறைந்தது. சனிக் கிழமை மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. இதில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் குறைவாக விழுகிறது.