tamilnadu

img

தோழர் எம்.ராஜாங்கம் உருவப்படத்திற்கு அஞ்சலி

திருநெல்வேலி ஜூலை 22- நெல்லை மாவட்ட சிஐடியு துணை தலைவராகவும் பீடித் தொழி லாளர் சங்க மாவட்ட தலைவராகவும் சிஐடியு தொழிற் சங்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான தோழர்.எம். ராஜாங்கம் காலமா னார். அவரின் மறைவிற்கு நெல்லை  மற்றும் தென்காசி மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் அவரது உருவப்படம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது. வாசுதேவநல்லூர் ஒன்றி யக்குழு சார்பில் இரங்கல் கூட்டம் வாசுதேவநல்லூர், சிவகிரிஆகிய இடங்களில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் ஒன்றியச்செய லாளர் இரா.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.நடராஜன் , ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ப.சுப்பை யா, எம். ராமசுப்பு, சுப்பிரமணியன், கிளைச்செயலாளர்கள் ராஜ கோபால், மீனாட்சிராஜ், சக்திவேல். க.மாரியப்பன், பே.மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். கங்கை கொண்டான் சிப்காட் ஏ.டி.சி.டயர் கம்பெனி அருகில் ராஜாங்கம் அவர்களின் அஞ்சலி கூட்டம்  நடைபெற்றது.