tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 31- போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு சம்பள பிடித்தம் இல் லாமல் முழு சம்பளம் வழங்க கோரி நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வண்ணாரப்பேட்டை தாமிர பரணி டெப்போ முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர் மன் தலைமையில் தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் பெருமாள் ,சிஐடியு மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் ஜோதி, மாவட்ட தலை வர் காமராஜ், மாவட்ட பொரு ளாளர் மணி ,துணை பொதுச்செய லாளர் பாலசுப்ரமணியன், ஏஐ டியுசி சார்பில் உலகநாதன்,எச்.எம்.எஸ் மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், தொமுச மகா விஷ்ணு உட்பட பலர் பேசினர் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆர்ப்பாட்டம் வண்ணாரப்பேட்டை பணிமனை முன்பும் கேடிசி நகர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

;