திருநெல்வேலி, ஜூலை 9- கொரோனா தொற்று பரவாமல் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அரசின் வழிகாட்டுதல், அரசு ஆணைகளை போக்குவரத்து கழக நிர்வாகங்கள் அமல்படுத்த மறுப்பது உள்ளிட்டவை அடங்கிய மனுவை, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் அளித்தனர். மனு கொடுக்கும் இயக்கத்திற்கு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எ.ஸ்.பெரு மாள், சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொ துச்செயலாளர் ஜோதி, பொருளாளர் மணி உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர், நெல்லை மாவட்ட நிர்வாகம் மனு வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் அலுவலக வாசலில் உள்ள பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்தி விட்டு சென்றனர்.