tamilnadu

img

தோழர் அசோக்கின் குடும்பத்திற்கு அ.சவுந்தரராசன் ஆறுதல்

திருநெல்வேலி, ஜூலை 13- நெல்லையில் கடந்த மாதம்  சாதி வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் மு.அசோக்கின் குடும்பத்திற்கு சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் ஆறுதல் கூறினார். கடந்த மாதம் நெல்லை கரை யிருப்பில் ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் மு.அசோக்கின் இல்லத்திற்கு  சி.ஐ.டி.யு மாநில தலை வர் அ.சவுந்தரராசன் சனிக்கிழமை வந் தார். அவரது தாய்,தந்தை, சகோத ரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.  தொடர்ந்து அவர்களது நிலையை கேட்டறிந்தார்.  அவருடன் சிஐடியு மாநி லச் செயலாளர் ரசல், மாவட்டச் செயலா ளர் ஆர்.மோகன், மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம், சிபிஎம் நெல்லை தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பெருமாள், சிஐடியு நிர்வாகிகள் ஜோதி, ஆர்.முருகன், எல்.சரவண பெருமாள் மற்றும் எஸ்.கே.செந்தில், பாலு உட்பட தோழர்கள் இருந்தனர்.