திருநெல்வேலி ,ஜூன் 8- செவ்வாயன்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வாசுதேவநல்லூர் 18, செங்கோட்டை 11, பாளையங்கோட்டை 10, ஆலங்குளம் 9, நெல்லை 8, திருவேங்கடம் 6, பாப்பாக்குடி 5, கீழப்பாவூர் 5, கடையம் 5, புளியங்குடி 5, அம்பை 3, ராதாபுரம் 3, நாங்குநேரி 3 என நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 91க்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிபிஐ மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.