திருநெல்வேலியில் பறை இசைக்கருவிகளுடன் அரசு பேருந்தில் பயணித்த மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் பறை இசைக்கருவிகளுடன் ரஞ்சிதா என்ற கல்லூரி மாணவி ஏறியுள்ளார். அப்போது, பறை இசைக்கருவிகளுடன் பேருந்தில் பயணிக்கக் கூடாது என்று மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பேருந்தின் நடத்துநர் கணபதி, தகாத வார்த்தைகளால் மாணவியை திட்டியுள்ளார். மேலும், அப்பேருந்திலிருந்து நடுவழியில் மாணவி ரஞ்சிதாவை இறக்கிவிடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடத்துநர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.