நெல்லையில் திடீர் மழை மனம் குளிர்ந்த மக்கள்
திருநெல்வேலி, அக 6- நெல்லையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கத்தால் மக்கள் தவித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெயில் தணிந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், என்ஜிஓ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இத னால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு
திருநெல்வேலி, அக்.6- புளியங்குடி அருகே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் ஒருவர் சனிக்கிழமை சிறையில் அடைக் கப்பட்டார். புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் விஜயபாண்டியன் (33). இவா் ஒரு கொலை வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் சக்திகுமார் பரிந்துரையின் பேரில், விஜயபாண்டி யனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் விஜய பாண்டியன் கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை பாளை யங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கார்-மோட்டார்பைக் மோதி விபத்து ஒருவர் பலி
தூத்துக்குடி, அக்.6- தூத்துக்குடியில் காரும் மோட்டார் பைக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மடத்துார் தெற்குதெருவை சேர்ந்த நவ மணி என்பவரது மகன் ஜேக்கப்மணி (49). இவர் ஞாயி றன்று காலை தனது மோட்டார்பைக்கில் முருகேசன்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பைக்கும், சேலம் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்த சீனி வாசன் மகன் செல்வமுத்து குமாரசாமி ஓட்டி வந்த காரும் மோதி விபத்திற்குள்ளானதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஜேக்கப்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடம் வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர விளையாட்டுப் போட்டி
விருதுநகர், அக்.6- 2019-20ஆம் ஆண்டிற்கான ஜுலை மாத மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கத்தில் அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது- தடகளம், கூடைபந்து, கையுந்துபந்து, நீச்சல் போட்டி கள் நடைபெற உள்ளன. இதில் 14 வயதிற்கு மேல் 19 வயதிற்கு கீழ் 12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாண வியர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தனி நபர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளலாம். குழுப்போட்டி யில் ஒரு பள்ளியிலிருந்து ஒரு அணி மட்டுமே அனு மதிக்கப்படும். தடகளம், நீச்சல் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். குழுப்போட்டியில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற வர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டி யில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக தலைமை ஆசிரி யர், முதல்வரிடம் தகுதிச் சான்றிதழ் பெற்று வர வேண் டும். போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பய ணப்படி, தினப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தெரி வித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் காவல்துறைக்கு தமுஎகச கண்டனம்
மதுரை, அக்.6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் கருத்தரங்கிற்கு திருப்பரங்குன்றம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதை அந்த அமைப்பு வன்மை யாகக் கண்டித்துள்ளது. இது குறித்து தமுஎகச புறநகர் மாவட்டக்குழு கூறியிருப்பதாவது:- திருப்பரங்குன்றம் தமுஎகச கிளை ஞாயிறன்று கருத்த ரங்கம் நடத்த 16-கால் மண்டபம் அருகில் அனுமதி கேட்டி ருந்தது. இதை மறுத்த காவல்துறை பேருந்துநிலையம் அருகே நடத்திக்கொள்ளுமாறு கூறியது. திங்களன்று ஆயுதபூஜை என்பதால் பேருந்து நிலையப் பகுதியில் சிறு வியாபாரிகள் அதிகளவில் கடைஅமைத்திருந்தனர். இத னால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. காவல்துறை எந்தக் காரணமும் இன்றி 16 கால் மண்டபப் பகுதியில் அனுமதி மறுத்து இடையூறான பேருந்து நிலை யப் பகுதியில் நிகழ்ச்சியை நடத்தச் சொல்வது உள்நோக்கம் கொண்டது. தமுஎகச மீதும், நிகழ்வின் மீதும் மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படவேண்டுமென்ற யாரு டைய தூண்டுதலாலோ காவல்துறை திட்டமிட்டு இந்த நிகழ்வை அணுகுகிறதோ என சந்தேகிக்க வேண்டி யுள்ளது. காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
பேருந்துநிலையத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது
திருவில்லிபுத்தூர், அக்.5- திருவில்லிபுத்தூர் நகர் பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தீக்கதிரில் செய்தி வெளி யானது. இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம், வாறுகால் பகுதியில் தரைப்பாலம் கட்டுவதற்கு ரூ. 1,65,000த்திற்கு டெண்டர் விட்டது. இதையடுத்து ஞாயிறன்று பணிகள் தொடங்கின. பணிகள் தொடங்கியுள்ளதால் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இராஜபாளை யத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள் மணிக்கூண்டு வழியாவும், சிவகாசி, வத்திராயிருப்பு செல்லும் பேருந்து கள் அனைத்து பேருந்துகளும் வெளியேறும் பகுதியில் உள்நுழைந்து அதன் வழியாகவே வெளியே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.