tamilnadu

கம்ப்யூட்டர்கள் திருட்டு

திருநெல்வேலி, ஜூன் 3- நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே பள்ளியின் கதவை உடைத்து கணினியை திருடி சென்றவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர். திருவேட்டநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன் கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரி வித்தனர்.இதையடுத்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளி உள்ளே சென்று பார்த்த பொழுது தலைமை ஆசிரி யர் அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினி மற்றும் ப்ரொ ஜெக்டர் ஆகியவை திருடப்பட்டு இருப் பது தெரியவந்தது. இதுதொடர்பாக தலை மையாசிரியர் கோமதிநாயகம் கொடுத்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி காவலர் கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.