tamilnadu

img

தமிழகத்தில் இருந்த கடைசி ஜமீன் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்

திருநெல்வேலி,  மே 25- சிங்கம்பட்டி சமஸ்தா னத்தின் 31-வது பட்டம் பெற்ற ஜமீன்தார் டி.என்.எஸ்.  முருகதாஸ் தீர்த்தபதி (89) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். தென் தமிழகத்தில் மிக வும் பழமையானது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி. 1100 ஆம் ஆண்டில் உரு வான இந்த சமஸ்தானத்தின் 31-வது பட்டத்தை தனது மூன்றரை வயதில் பெற்ற வர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி 29.9.1931இல் பிறந்த இவர் இந்தியாவின் கடைசியாக முடிசூட்டிய மன்னர் என்ற பெருமை பெற்றவர். மேலும் சிங்கம்பட்டி ஜமீனுக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற கரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் உள்பட 8 கோவில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடை பெறும் ஆடி அமாவாசை விழாவில் ராஜ உடையில் மக்களுக்குக் காட்சியளித்து வந்தார். அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை கட்டுவதற்கு சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் இலவசமாக இடம் வழங்கப் பட்டுள்ளதால் தீர்த்தபதி என்ற பெயரிலேயே செயல் பட்டு வருகிறது.  இந்நிலையில் உடல்நலக்குறைவு கார ணமாக சிங்கம்பட்டியில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஞாயிறன்று இரவு 9.30 மணிக்கு காலமானார். இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.