tamilnadu

நெல்லை சந்திப்பில் ரயிலில் சிக்கி  மாணவி படுகாயம்

திருநெல்வேலி, மார்ச் 5- திருநெல்வேலி சந்திப்பில் பாவூர் சத்திரம் மாணவி ரயிலில் சிக்கி படு காயமடைந்தார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கீழத் தெருவை  சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் ரேணுகாதேவி (19). இவர் நெல்லையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வருகிறார். இதற்காக தினமும் பாவூர்சத்தி ரத்தில் இருந்து ரயிலில் நெல்லைக்கு சென்று வருவது வழக்கம்.  வியாழக்கிழமை காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த ரேணுகாதேவி ரயிலில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு உள்ளார். அப்போது திடீரென ரயிலை எடுக்கவே ரேணுகா தேவி கீழே இறங்க முயன்றுள்ளார். இதில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதனைப் பார்த்த ரயில் பயணிகள் கூச்சலிட ரயில் நிறுத்தப்பட்டது. காயம டைந்த ரேணுகாதேவி மீட்கப்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இது குறித்து சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.