திருநெல்வேலி, ஆக.29- நெல்லை மாவட்டம் வள்ளியூர் நரிக் குறவர் காலனியை சேர்ந்த ஒரு பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரச வத்திற்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் சேர்ந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானது. மேலும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவமாக குழந்தையும் பிறந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தாயும், மகளும் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற அந்த பெண் இரவு திடீரென்று காணாமல் போனார். இதனால் அவரை ஊழியர்களும், சுகாதார அதிகாரிகளும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறைக்கு தகவல் தெரிவித்த னர். இதைத்தொடர்ந்து நெல்லையில் இருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் தீவிரமாக தேடினர். அப்போது அந்த பெண் நாங்குநேரியை கடந்து வள்ளியூ ருக்கு நடந்து சென்றது தெரியவந்தது. உட னடியாக காவலர்கள் அந்த பெண்ணை பிடித்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காணாமல் போனதில் இருந்து 26 மணி நேரத்திற்குள் அந்த பெண்ணை காவல்துறை யினர் பிடித்து அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.