tamilnadu

பிளஸ் 2 மதிஅப்பெண் குறைவு: மாணவி தற்கொலை முயற்சி

திருநெல்வேலி, ஏப்.20- தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெள்ளியன்று அறிவிக்கப்பட்டன. இத்தேர்வில் தமக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று பத்தமடை அருகே கரிசூழ்ந்தமங்கலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

;