tamilnadu

img

நெல்லை - தென்காசியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 13- தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி -தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, குற்றாலம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திரு நெல்வேலி மாநகரத்தில் மகாராஜாநகர், சாந்திநகர், வண்ணாரப்பேட்டை, பெரு மாள்புரம், மேலப்பாளையம், சிந்துபூந் துறை, தச்சநல்லூர், மீனாட்சிபுரம், டவுண் பேட்டை ஆகிய 18 இடங்களில் காலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 400 பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அகில இந்திய செயலாளர் கருமலை யான், சிஐடியு மாவட்டச் செயலாளர் மோகன், தலைவர் வேல்முருகன், பொரு ளாளர் பெருமாள், சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.

;