tamilnadu

img

பாளை அரசு சித்தா கல்லூரியில் வெளிநோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்

திருநெல்வேலி, ஏப். 3- பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரியில் வெளி நோயாளிகள் சிகிச்சை மற்றும் கசாயம் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் வழங்கப்பட்டு வரும் கசாயமும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கான தற்காலிக நடவடிக்கை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே உள்நோயாளிகள் பிரிவு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூடப்பட்ட நிலையில் கொரோனா தடுப்புப் பிரிவு தனி சிகிச்சை வார்டு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

;