tamilnadu

தமிழகம் வந்த 1000 வாத்துகளை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

திருநெல்வேலி, மே 31- கேரளாவிலிருந்து தமிழ கத்திற்கு ஒரு வேனில் கொண்டு வரப்பட்ட 1000 வாத்துக்களை புளியரை சோதனைச் சாவடி யில் தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கேரளாவிற்கு திருப்பி அனுப்பினார்கள். தமிழக கேரள எல்லையான புளியரையில் தமிழக காவல் துறை, வருவாய்த்துறை, நெடுஞ் சாலை துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, வணிக வரித்துறை, உள்ளிட்ட அதிகாரி கள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கேரள மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்து உரிய அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிடுவதோடு அதில் வரும் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அதன் பிறகே தமிழகத்திற்குள் அனு மதித்து வருகிறார்கள்.

மேலும் நெல்லை மண்டல கால்நடை இயக்குநர் டாக்டர் முகமது காலித், தென்காசி கோட்ட துணை இயக்குனர் டாக்டர் வெங்கட் ராமன் ஆகியோரின் அறிவுரைப் படி டாக்டர் ராஜேஷ் மற்றும் கால்நடை ஆய்வாளர் செய்யது இப்ராகிம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் நடராஜன் அடங்கிய குழுவினர் தமிழக கேரள எல்லை யான புளியரை சோதனைச்சாவடி யில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடன் கொரோனா பணிக்கான மருத்து வக் குழுவினரும் சேர்ந்து முகா மிட்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி ஒரு வேன் வந்தது. அந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் மற்றும் வாத்து முட்டைகள் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே பற வைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் கோழி கழிவுகள், முட்டைகள் மற்றும் கோழிகள் போன்றவை இருந் தால் திருப்பி அனுப்பப்பட்டு வரு கின்றன. அதன்படி அந்த வேனின் டிரைவரை அதிகாரிகள் எச்சரித்து வாத்துகள் மற்றும் வாத்து முட்டை களை ஏற்றி வந்த வேனை தமி ழகத்திற்குள் அனுமதிக்க மறுத்த தோடு அந்த வேனை கேரளா வுக்கு திருப்பி அனுப்பினார்கள். மேலும் அந்த வழியாக வாக னங்களில் வருவோரை தீவிர மரு த்துவ பரிசோதனைக்கு பின்பு தமி ழகத்திற்குள் அனுமதித்து வரு கிறார்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் மையங்களுக் கும், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடி யாக சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கும் அனுப் பப்பட்டு வருகிறார்கள்.