திருநெல்வேலி, ஜூன் 14- நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு செழியநல்லூர் உருத மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (41), இவரது மனைவி முத்துலட்சுமி(35). சுடலைமுத்து மது அருந்துவதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி, வீட்டிலிருந்த இரண்டு பைக்குகளை தீயிட்டு எரித்து, முத்துலெட்சுமியை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துலெட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், மானூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து சுடலைமுத்துவை கைது செய்தார்.