tamilnadu

img

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

திருநெல்வேலி, ஏப்.25-நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் அடியோடு சாய்ந்து விவசாயிகளை சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.களக்காடு, சுரன்குடி, வடுகட்சிமதில், புளியங்குளம், கோவிலம்மாள்புரம், சாலை புதூர், பத்தை, வடகரை ஆகியபகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் இந்த பகுதியில் உள்ள வாழைகள் அடியோடு சாய்ந்துள்ளன. ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இது கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடனை வாங்கிவிவசாயம் செய்து வரும் விவசாயி களுக்கு வாழைகள் சாய்ந்ததால், செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாங்குநேரி தாலுகாகுழுவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

;