திருநெல்வேலி:
நெல்லையில் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அசோக்கின் குடும்பத்திற்கு நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ அன்சலான் ஆறுதல் தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் மு.அசோக் கடந்த 12ஆம் தேதி இரவு கரையிருப்பில் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார் , படுகொலை சமபவத்திற்கு ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்ற்னர் ,இந்நிலையில் கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை சி.பி.எம் எம்.எல்.ஏ அன்சலான் அசோக்கின் தாய்,தந்தை ,சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.தொடர்ந்து கரையிருப்பில் அசோக் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.