திருநெல்வேலி, மே 23- நெல்லை சந்திப்பு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த பகுதியில் மின் மோட்டார், இரும்புப்பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடை கள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு தடையால் கடைகள் பல நாட்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம்தான் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் வியாபாரம் முடிந்த அடைக்கப்பட்ட நிலையில், ஈரடுக்கு மேம்பாலம் சந்திப்பு காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சந்திரதேவராஜ் என்ப வருக்கு சொந்தமான மெடிக்கல், முகமது அலி என்பவரின் மின் மோட்டார், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான எலெ க்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட 10 கடைகளின் கதவின் பூட்டு க்களை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.