tamilnadu

img

திருநெல்வேலியில் மீண்டும் பேருந்து சேவை துவக்கம்

திருநெல்வேலி, ஜூன் 1- நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது. திருநெல்வேலியில் 2 மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு மீண்டும்  துவங்கியுள்ளது. இதில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களுக்குள் பயணிக்கலாம். பிற ஊர்களுக்கு செல்ல இ-பாஸ் அவசியம். 50 சதவீத பேருந்துகள் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகிறது.  பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பழைய பேருந்து கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. பயணி கள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு கைகளை கழுவுவ தற்கு கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஏறுவதற்கும் முன்பு காய்ச்சல் உள்ளதா என்பதை அறிய மானிட்டர் மூலம் வெப்ப நிலை அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.