tamilnadu

img

முடி திருத்தும் தொழிலாளர்கள் தென்காசி ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி, மே 14- தென்காசி மாவட்ட ஆட்சிய ரிடம் முடிதிருத்தும் தொழிலாளர் கள் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. பீடி சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கணபதி, சிபிஎம் வட்டார செயலாளர்கள் அயூப் கான், தங்கம், சிஐடியு நிர்வாகி கள், முடிதிருத்தும் சங்க நிர்வாகி கள், கிழப்பாவூர், பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், கடைய நல்லூர், தென்காசி, குற்றாலம் மற்றும் மாவட்டத்தில் பல பகுதி களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.