திருநெல்வேலி, ஜூலை 12- நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 1800 ஐ கடந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பர வலை கட்டுப்படுத்திட ஜூலை 05, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக் கிமைகளில் எந்த வித தளர்வு களும் இன்றி முழு ஊரடங்கு தமி ழகம் முழுவதும் அமல்படுத்தப் படும் என தமிழக அரசால் தெரி விக்கப்பட்டிருந்தது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 2வது ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமலில் உள் ளது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடை கள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக பரபரப்புடன் காணப் படும் பிரதானச் சாலைகள் அனை த்தும் மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காய்கனி சந்தை கள், கடைகள், உணவகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.நெல்லை -மதுரை ,நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வித வாகனங்களும் இயக்கப்படா மல் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினா். ஆங்காங்கே வெளியே சுற்றிய வர்களை போலீசார் விசாரித்து அனுப்பினர். முக்கிய சந்திப்பு களில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.