திருநெல்வேலி, ஜூலை 4- சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி வேண்டும். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லை டவுனில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமை யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். விவசாயத்திற்கான இலவச மின்சா ரத்தை ரத்து செய்யக்கூடாது. நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகையடி முனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தாலுகா தலை வர் இசக்கிமுத்து ,ராஜேஷ், வாழ வந்தான், சுரேந்தர், நாராயணன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.