tamilnadu

img

பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களின் உரிமையை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:
பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட கோரி நெல்லையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பூ.கோபாலன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார், கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எம்.சுடலைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபாளையங்கோட்டை தாலுகாச் செயலாளர் பா.வரகுணன், திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் கலைகண்ணன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் நிறை உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பாலு நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;