திருநெல்வேலி, ஜூலை 16- கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் கடன் வழங்குவதை நிறுத்தியுள் ளது. இதை வாடிக்கையா ளர்களுக்கு தெரியப்படுத்தக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன் அன்று நகை மதிப்பீட்டா ளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தி ற்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.பெருமாள் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், மாவட்ட துணைத்தலைவர் எம்.சுடலைராஜ் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். சங்க மாவட்ட பொ துச்செயலாளர் மகாராஜன், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து கோரிக்கை மனு மாவட்ட நிர்வாகத்திடம் சேர்ப்பிக்கபட்டது.