திருநெல்வேலி, ஜூன் 15- நுண்நிதி நிறுவனங்க ளால் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நுண்நிதி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். உடன டியாக ஹெல்ப் லைன் துவங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழு சம்பந்தமாக பெண்களை விசாரிக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும். ஊர டங்கு முடியும் வரை குழு பெண்களிடம் கடனை செலுத்த சொல்லி கட்டா யப்படுத்தும் நிறுவனங்கள் மீது உடடினயாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். குழு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அப்போது அதிகாரியை பார்க்க அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் தாண்டி வாக்குவாதம் நடத்திய பிறகு இரண்டு பேர் உள்ளே செல்ல அனு மதிக்கப்பட்டனர். உள்ளே சென்றதும், ‘கலெக்டரை பார்த்து மனு கொடுக்கணும்’ என்று சொன்னவுடன் ஒரு காவ ல்துறை அதிகாரி, ‘கலெக் டரை பார்க்க முடியாது. புகார் பெட்டியில் போடுங்கள்’ என்று கூறியதும், ஒருவர் வந்து ‘வாங்கம்மா... என்ன வேண்டும்’ என்று கேட்டார்.
‘கலெக்டரை பார்க்கணும்’ என்றவுடன், நான்தான் என்று கூறி மனுவை பெற்று கொண்டு, வெளியே வந்து கூட்டமாக நிற்காதீர்கள். இடைவெளியோடு நில்லு ங்கள் என்றார். மனுக்களை கொடுங்கள் என்றவுடன், ‘பரவா யில்லை... கலெக்டரே நேரில் வந்து வாங்குகிறார் என ஆச்ச ரியப்படும் போதுதான் உண்மை தெரிந்தது. அவர் கலெக்டர் இல்லை, கலெக்ட ரின் பி.ஏ. என்று. இப்படி கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல் பாதிக்கப் பட்ட மக்களை மிரட்டி விரட்டி விடுகிறார்கள். இதனால் வய தானவர்கள், மாற்றுதிற னாளிகள், பெண்கள் உள்பட பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் போய் சேருமா? என்ற கேள்வியும் எழுந் துள்ளது. ஊரடங்கு காலத்தில் தன்னை பாதுகாக்க பாதிக் கப்பட்ட மக்களை சந்திக்க விரும்பாத கலெக்டரின் செயல்பாடு அதிர்ச்சியாக உள்ளது. வரும் காலங்க ளில் மக்களுடைய பிரச்சனை களை தீர்க்க முயற்சி நடக் குமா? என்ற கேள்வியும் உள்ளது. இதில் மாவட்டச் செயலா ளர் கற்பகம், மாவட்ட நிர்வா கிகள் ஆயிஷா, தங்கம், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் சங்கரி, மேனகா, மல்லிகா மற்றும் கங்கா, வசந்தி, சுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.