திருநெல்வேலி, ஜூலை 8- வீ.கே.புதூர் ஆட்டோ தொழிலாளி குமரேசன் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர் சந்திரசேகர், போலீஸ் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி யும், வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீகே புதூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குளம் தாலுகா செயலாளர் குணசீலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகுரு, கணபதி, முத்துப்பாண்டியன் மற்றும் ராஜாங்கம், சங்கரன், மாரியப்பன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்
கீழப்பாவூர் ஒன்றியம்
வி.கே.புதூர் ஆட்டோ டிரைவர் மர ணத்திற்கு நீதி கேட்டு தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் பல்வேறு இடங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட் டம் நடத்தியது. திப்பணம்பட்டி கட்சி கிளைசெயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது இதில் சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல் முருகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் தங்கம், ஓன்றிய குழு உறுப்பினர் முருகே சன், கிளைதோழர்கள் அய்யம்பெருமாள் மகாராஜன் பத்திரலால் ரத்தினசாமி பங்கேற்றனர். கீழப்பாவூர் ஓன்றிய கமிட்டி ஆவூடை யானூர் கிளையின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு ஆரியமுல்லை தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தங்கம், இன்னியாசி, ஆட்டோ தொழிலாளர்கள் ஜெகன் ஆத்தி யப்பன் சேர்மன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசியில் ஒரே நாளில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மார்க்கெட் அருகில், வி.டி.எஸ்.ஆர். மகால் அருகில்,குற்றாலம், இடை கால்,ஆய்குடி கீழுர், மேலுர்,சுந்தர பாண்டிய புரம்,தென்காசி கே.ஆர்.காலனி பகுதி உட்பட் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர்கள் வள்ளிநாயகம் கருப்பையா மற்றும் தோழர்கள் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி, மாவட்டக் குழு உறுப்பினர் எம். வேல்முருகன், சிபிஎம் தென்காசி வட்டார செயலாளர் அயுப்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.