tamilnadu

img

சிபிஎம், மாதர் சங்கப் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு

திருநெல்வேலி, ஜூலை 20- தென்காசி மாவட்டம் ஆலங் குளம் தாலுகாவில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் கடனை வசூ லிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் ஜூலை 24 பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடை பெறுவதாக இருந்தது.  அதனையொட்டி திங்கட்கிழமை மாவட்ட காவல் துணை கண்காணிப் பாளர் மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை கூட்டம் நடை பெற்றது. இதில் மைக்ரோ பைனா ன்ஸ் நிறுவன பொறுப்பாளர்களிடம் ஊரடங்கு முடியும் வரை கடனை கேட்டு நெருக்கடி கொடுக்க கூடாது என்று எழுதி வாங்கப்பட்டது. பேச்சுவார்த்தையில், சுந்தரி, வசந்தி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்க ளுடன் சிபிஎம் ஆலங்குளம் வட்டார செயலாளர் குணசீலன், மாவட்டக் குழு உறுப்பினர் மாரியப்பன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் கிடைத்த வெற்றியை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.