tamilnadu

கொரோனா தாக்கம் - 144 தடை உத்தரவால் 4 லட்சம் பீடித் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிப்பு

திருநெல்வேலி, மார்ச் 24- கொரோனா வைரஸ்ஸால் வேலையி ழந்து பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் பீடித்  தொழிலாளர்களுக்கு வாழ்வுரிமை நிவார ணம் ரூ.5000 மத்திய-மாநில அரசு வழங்கிட வேண்டும் என சிஐடியு நெல்லை மாவட்ட  பீடித் தொழிலாளர் சங்க தலைவர் ம.ரா ஜாங்கம், மாவட்ட பொதுச் செயலாளார் எம்.வேல்முருகன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் பீடித் தொழிலாளிகள், மத்திய-மாநில அரசுகளின் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவ டிக்கை, 144 தடை உத்தரவு மற்றும் பீடி கம்பெ னிகள் மூடல் போன்ற காரணங்களால் மிக ப்பெரிய பாதிப்பு அடைந்துள்ளனர். அன்றா டம் பீடி சுற்றி வாழ்க்கை நடத்தி வந்த தொழி லாளர்கள் வாழ்வதே பெரிய கேள்விகு றியதாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள பீடி தொழிலாளர்களுக்கு மத்திய-மாநில  அரசுகள் ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழ ங்கிடுமாறும், பீடி கம்பெனி நிர்வாகங்கள் தங்கள் கம்பெனியில் பணிபுரியும் பீடி தொழி லாளர்களுக்கு முன் பணம் ரூ5000 வழங்கிட  நடவடிக்கை  எடுத்திடுமாறும் சிஐடியு பீடித் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.