tamilnadu

நெல்லையில் 181 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருநெல்வேலி, ஜூலை 15- நெல்லை மாவட்டத்தில் 181 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,116-ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் செவ்வாய்கிழமை வரை 1,935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 935 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலை யில் புதன்கிழமை மாவட்டத்தில் புதிதாக 181 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,116-ஆக உயர்ந்துள்ளது.