tamilnadu

img

தோழர் சண்முகவேலாயுதம் காலமானார்

திருநெல்வேலி, ஆக.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  நெல்லை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் இயக்கத்தின் முன் னோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான தோழர் சண்முகவேலாயுதம் ஞாயி றன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. 1950, 60-களில் நெல்லை மாவட்டத்தில் 18 பஞ்சாலைகள் இயங்கி வந்தன. நெல்லை மாவட்ட இடதுசாரி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணாக பஞ்சாலை தொழிற்சங்க இயக்கம் இருந்தது. நவீன தாராள மய கொள்கையின் காரணமாக பெரும்பாலான பஞ்சாலைகள் தற் போது மூடிக் கிடக்கின்றன. நெல்லை டவுண் அரசு உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த தோழர் சண்முக வேலாயுதம், 1959-ல் தினக்கூலி ஒரு ரூபாய்க்கு கணபதி மில்லில் வேலைக்கு சேர்ந்தார். தொழிற்சங்கத் தோடு தொடர்பு ஏற்பட்டது. 1970-ல் உருவாக்கப்பட்ட நெல்லை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாக தேர்வாகி செயல்பட்டார்.

அச்சங்கத்தின் மாவட்ட தலைவராக தோழர் பாலவிநாயகமும், செய லாளராக தோழர் எஸ்.கே.பழனிசாமி யும் செயல்பட்டு வந்தனர். கூலி உயர்வுக்காகவும், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டுமெனவும், பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களுக்காகவும் பஞ் சாலை தொழிலாளர் சங்கம் எண் ணற்ற போராட்டங்களை நடத்தியது. தோழர் சண்முகவேலாயுதம் இப் போராட்டங்களில் முன்வரிசையில் நின்றவர். பல முறை சிறை சென்றுள் ளார். தொழிலாளர்களின் பல நூறு வழக்குகளை தொழிலாளர் நீதிமன் றத்தில் நடத்தி பல வெற்றிகளும் பெற்றுள்ளார். நெல்லை மாநகர பொது தொழிலாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். பாத்திர பட்டறை தொழிலாளர் சங்கம், அச்சக தொழி லாளர் சங்கம், பாரத் மோட்டார்ஸ் சங்கம், கங்கை கொண்டான் ஸ்லீப்பர் தொழிலாளர் சங்கம் உள் ளிட்டு 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பொது தொழிலாளர் சங்கத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

தோழர் சண்முகவேலாயும் திரு நெல்வேலி நகராட்சியில் ஒரு முறை யும், மாநகராட்சியாக திருநெல்வேலி மாற்றப்பட்ட பின் ஒரு முறையும் கவுன்சிலர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். திறம்பட செயலாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். புன்சிரிப்போடு எவரை யும் எளிதில் ஈர்க்க கூடியவர். இளம் தோழர்களை அரவணைக்க கூடி யவர். தோழர் சண்முகவேலாயு தத்திற்கு நான்கு பிள்ளைகள். மூத்த மகன் சண்முகம் கட்சி உறுப்பினர்.  தோழர் சண்முகவேலாயுதம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு செவ்வணக்கத்தை தெரிவிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தி னருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.