திருநெல்வேலி, ஏப் 1- இந்திய தொழிற்சங்க மையத்தின் திருநெல்வேலி தென்காசி மாவட்ட தலைவர் எம். வேல்முருகன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் , முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பென்சன் வாங்கி வருகின்றனர் . இவர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் சமுகபாதுகாப்பு திட்டம் திருநெல்வேலி அலுவலகத்தில் பென்சன் வழங்கவில்லை. கொரோனா நோய் தடுப்பு 144 தடை உத்தரவு காரணமாக இத்தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் அன்றாடம் உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர் . எனவே தாங்கள் தலையிட்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6மாதங்களுக்கு மேல் உள்ள பென்சன் பணம் கிடைத்திட நடைவடிக்கை எடுத்து பசி பட்டினியில் இருந்து பாதுகாத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்