tamilnadu

img

ஏப்.28 வரை நெல்லையில் புத்தக கண்காட்சி

திருநெல்வேலி, ஏப்.20-நெல்லையில் புத்தக கண்காட்சி வெள்ளியன்று தொடங்கியது. ஏப்.28-ம் தேதி கண்காட்சி நிறைவு பெறுகிறது.உலக புத்தக தினத்தையொட்டி நெல்லையில் தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு புத்தகவிற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நெல்லை புத்தக திருவிழா என்ற பெயரில் புத்தக கண்காட்சியை நடத்துகின்றனர். நெல்லை வண்ணார்பேட்டை சகுந்தலா ஓட்டல் சுமங்கலி திருமணமஹாலில் வெள்ளியன்று இதற்கானதொடக்க விழா நடைபெற்றது. தேசிய வாசிப்பு இயக்க தலைவர் தம்பான் தலைமை வகித்தார். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்க பொருளாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்த கண்காட்சியில் முன்னணி பதிப்பகபுத்தகங்கள், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், கலை, கல்வி, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், ஜோதிடம், அரசியல், வணிகம், பொருளாதாரம், போட்டித்தேர்வு, மருத்துவம், புதினம், விவசாயம், வேளாண்மை என 1 லட்சம் தலைப்புகளில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து புத்தகங்களும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில்விற்பனை செய்யப்படுகிறது.முன்னதாக மிருத்யாஞ்சலி நாட்டியாலயா மாணவிகளின் வரவேற்பு நாட்டியம் நடைபெற்றது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அறிவியல்புல முதல்வர் என்.கிருஷ்ணன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட மைய நூலகர் அ.முத்துகிருஷ்ணன் முதல் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பதிவாளர் எஸ்.கலாதேவி, நூலகத்துறை தலைவர் ப.பாலசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், வாசகர் வட்டத் தலைவர் அ.மரியசூசை, ஆசிரியர் கே.ஜி.பாலசுப்ரமணியன், வாசகர் வட்ட துணைத்தலைவர் கோ.கணபதி சுப்ரமணியன், நெல்லை கிரீன்சிட்டி அரிமா சங்க தலைவர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

;