திருநெல்வேலி, மே 27- பாவூர்சத்திரம் எம்கேவி கே.ரத்தினசாமி சாமில் லில் வேலை பார்த்து வந்த வாலிபரை வெளிநாட்டி லிருந்து மரத்தடிகள் வழியாக வந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் வகை பாம்பு கடித்தது. உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், பா வூர்சத்திரத்தில் பிரபலமான தனியாருக்கு சொந்தமான எம்.கே.வி கே. ரத்தினசாமி சாமில் உள்ளது. இந்த சா மில்லை ரத்தினசாமியின் மகன்களான கலையரசன், பவுன்ராஜ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இங்கு பர்மா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து மரத்த டிகள் விற்பனைக்காக கப்பல் மூலம் கொண்டு வரப் பட்டு விற்பனை செய்யப்ப டுகிறது.
இந்த மரத்தடிகள் வழியாக கொடிய விஷம் கொண்ட இராஜநாகம், கண்ணாடி விரியன், இரத்த வெறியன், கருநாகம், கட்டு விரியன் போன்ற பாம்புக ளும் வந்து விடுகின்றன. அவ்வப்போது இந்த கொடிய விஷ பாம்புகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் இந்த சா மில்லில் வேலை பார்த்து வந்த திருமலாபுரம் மாரி யப்பன் என்பவரது மகன் முத்துகுமார் (19) என்பவரை மரத்தடியில் ஒளிந்திருந்த கொடிய விஷம் கொண்ட வெளிநாட்டு கட்டுவிரியன் வகை பாம்பு கடித்தது.
இத னால் விஷம் ஏறி மயங்கி விழுந்த முத்துகுமாரை அவ ருடன் வேலை பார்த்து வந்த வர்கள் பாம்பை கொன்று அவரை மீட்டு பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். தொழிலாளி முத்து குமாரை கடித்த பாம்பையும் கையோடு கொண்டு சென்று மருத்துவர்களிடம் காட்டினர். இதனை தொடர்ந்து உயி ருக்குப் போராடி வரும் முத்து குமாருக்கு தீவிர சிகிச்சை யளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாவூர்சத்தி ரம் காவல் நிலையத்திற் கும் தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.