tamilnadu

நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 837 பிரசவம் பார்த்து சாதனை

திருநெல்வேலி/தென்காசி, ஜூன் 2- நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே மாதத்தில் 837 பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்த நிலையில், கொரோனா பாதித்த 6 கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பிறந்துள்ளது. பாளை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் பிரசவத்திற்காக நவீன கட்டிடம் கட் டப்பட்டு தினசரி சுமார் 20 பிரசவங்கள் வரை நடைபெற்று வந்தது.நெல்லை, தூத் துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து கடினமான மருத்துவ சிகிச்சை களுக்கும் நோயாளிகளை இங்கு அனுப்பு வது வழக்கம். சராசரியாக ஒரு மாதத்திற்கு 600-ல் இருந்து 700 வரை பிரசவம் நடை பெறும்.

ஒரு நாளைக்கு சராசரி 20 பெண் களுக்கே இதுவரை பிரசவம் நடந்துள்ளது.  தற்போது கொரோனா தொற்று நோயினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிர சவம் பார்க்க வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு ஏற்ப படுக்கை வசதி களும் அதிகரிக்கப்பட்டது. கூடுதல் மருத்து வர்களை நியமித்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தார் கள். இதன் காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் 837 பெண்களுக்கு பிரசவம் நடந்து, அழகான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இதில் 354 பெண்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்துள்ளது. 483 பெண்களுக்கு சுகப்பிரசவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுடன்
இதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 25 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மே மாதத்தில் 2-வது வாரத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 34 பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இது நெல்லை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத சாதனையாகும். 6 பெண்கள் கொரோனா நோயுடன் பிர சவம் பார்க்க இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த னர். அவர்களுக்கு தனிமை வார்டு ஏற் படுத்தப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பெண்களும் பூரண குணமடைந்து தங்கள் குழந்தைகளுடன் வீடு திரும்பி யுள்ளனர். இதைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணைமுதல்வர் டாக்டர் சாந்தாராம், உறை விட மருத்துவ அதிகாரி ஷியாம் ஆகியோர் மகப்பேறு மருத்துவர்களை பாராட்டினர்.

;