திருநெல்வேலி:
நெல்லையில் மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாளையங்கோட்டை மகாராஜா நகர் மின்வாரிய தலைமை பொறியாளர்அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச நடராஜன் தலைமைதாங்கினார்.சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டசெயலாளர் எஸ்.வண்ணமுத்து, திட்டத் தலைவர் பீர்முகமது ஷா, மின் வாரியபொறியாளர் சங்க மணிவாசகம், பொறியாளர் யூனியன் ராமர், ஐக்கிய சங்கம் தென்கரை மகாராஜன், மின் ஊழியர் காங்கிரஸ்முத்துக்குமார், அம்பேத்காரின் யூனியன் சிவகுமார், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.