திருநெல்வேலி:
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை வண்ணார்கேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடத்தியது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை நகர மக்களின் அடிப்படை கட்டமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாநகராட்சி பகுதியில் அமைந் துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,
மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் , மாநகருக்குள் அனைத்து பிரதான சாலைகளையும் விரிவுபடுத்த வேண்டும், குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில்மேம்பாலம் அமைத்திட வேண் டும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் படுத்தவேண்டும் அவர்களுக்கு தினக் கூலியாக ரூ. 639 வழங்கிட வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திதர வேண்டும், கண்டியாபேரி மருத்துவமனையை தரம்உயர்த்த வேண்டும், ராமையன் பட்டி குப்பை கிடங்கில் மறுசுழற்சிமுறையை செயல்படுத்த வேண் டும், மேலப்பாளையம் பகுதியில் அனைத்து சாலைகளையும் சீர்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் வீ.பழனி ,ஆர்.மோகன்,எம்.சுடலைராஜ், பாளை தாலுகா செயலாளர் வரகுணன், போக்குவரத்து இடைகமிட்டி செயலாளர் எஸ்.பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர் கு.பழனி, மின் அரங்க செயலாளர் பீர்முகம்மது ஷா ஆகியோர் பேசினர்.ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.